கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்கான உணவு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கல் நிறுத்தம்
இலங்கை சதொச நிறுவனத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த போஷாக்கான உணவு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் பெறுமதியான போஷாக்கு உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கையின் கீழ் மாதாந்தம் 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவு பொதிகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் பண தட்டுப்பாடு காரணமாக அதனை நிறுத்தியுள்ளதாக சதொச நிறுவனத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சதொச நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்த கர்ப்பிணி பெண்களுக்கான போஷாக்கான உணவு பொருட்கள் அடங்கிய பொதி நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பெண்கள், சிறுவர் மேம்பாடு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி தொடர்பான இராஜாங்க அமைச்சு தகவல்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை எனவும் தெரியவருகிறது.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri