கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்கான உணவு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கல் நிறுத்தம்
இலங்கை சதொச நிறுவனத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த போஷாக்கான உணவு பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் பெறுமதியான போஷாக்கு உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கையின் கீழ் மாதாந்தம் 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போஷாக்கு உணவு பொதிகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் பண தட்டுப்பாடு காரணமாக அதனை நிறுத்தியுள்ளதாக சதொச நிறுவனத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சதொச நிறுவனத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்த கர்ப்பிணி பெண்களுக்கான போஷாக்கான உணவு பொருட்கள் அடங்கிய பொதி நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பெண்கள், சிறுவர் மேம்பாடு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி தொடர்பான இராஜாங்க அமைச்சு தகவல்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை எனவும் தெரியவருகிறது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam