இந்திய பாகிஸ்தான் யுத்தம்- ஒரு வாரத்தில் 20 மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள்!!
அணுவாயுதம் கொண்டு தாக்குவோம் என்று பாகிஸ்தானிய அமைச்சர் அறைகூவல்விடுத்துள்ளது போலவோ, அல்லது ஆய்வாளர்கள் என்று சிலர் யூடியூபில் வந்து பொங்குவது போலவோ, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுவாயுத யுத்தம் என்பது ஒன்றும் சாதாரணமான விடயம் கிடையாது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகச் சிறிய அளவிலான ஒரு அணுவாயுத யுத்தம் நடைபெற்றால் கூட, ஒரு வாரத்தில் மாத்திரம் 20 மில்லியன் மக்கள் இறந்துவிடுவார்கள் என்று The Center for Arms Control and Non-Proliferation என்ற அமைப்பு கூறுகின்றது.
'Nuclear winter' என்று அழைக்கப்படுகின்ற அணுகுண்டுத்தாக்குதல்களினால் ஏற்படுகின்ற புகைமண்டலம் காரணமாக மாத்திரம் சுமார் 2 பில்லியன் மக்கள் பட்டிணிச்சாவினை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என்றும் அந்த அமைப்புக் எச்சரிக்கின்றது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அணுவாயுத யுத்தம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: