அரசாங்கத்தின் செயல் திட்டங்களை அங்கீகரிக்கவில்லை : மகிந்த பகிரங்கம்
பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி, எந்தவொரு தேர்தலையும் சந்திக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
செயல் திட்டங்கள்
தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிரான அவரது அறிக்கை குறித்து கேட்டபோது, அவர் மட்டுமல்ல, கட்சியின் 99 சதவீதமானவர்களும் அந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்று மகிந்த கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் செயல் திட்டங்களை பொதுஜன பெரமுன அங்கீகரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதனை அங்கீகரிக்காமல் இருப்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது, எங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அத்துடன் எந்த நேரத்திலும் எங்கள் கருத்தை தெரிவிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri