தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம்! காரணம் குறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய அறிவித்துள்ளார்.
திறந்த நீதிமன்றத்தில் இன்று (08.08.2023) இந்த விடயத்தை நீதவான் அறிவித்துள்ளார்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இதனை தெரிவித்தார்.
மரபணு அறிக்கை
இதேவேளை சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர் குழு, மீண்டுமொரு சுற்று கலந்துரையாடலை நடத்துவது அவசியம் என தமக்கு அறிவித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை தொடர்பான மரபணு அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதன்படி, அறிக்கையை அழைப்பதற்கு தேவையான கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான்அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 57 நிமிடங்கள் முன்

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
