தினேஷ் சாப்டர் மரணம்! மனைவிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையின் போது சாட்சியமளிப்பதற்காக அவரின் மனைவி அழைக்கப்பட்டுள்ளார்.
சாட்சியங்கள் அழைப்பு
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை சாட்சியங்கள் திறந்த நீதிமன்றில் அழைக்கப்படாமல் நீதவானின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (04) அழைக்கப்பட்டன.
இதன்போதே, சாட்சியமளிப்பதற்காக அவரின் மனைவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், அவர்களின் நிறுவனமொன்றின் பணிப்பாளரான கிறிஸ் பெரேரா, மற்றும் பொரளை மயான ஊழியர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.