புலம்பெயர் தமிழர்கள் மகிந்தவுக்கு வழங்கிய தண்டனை! கவலையில் திலித் ஜயவீர
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் கொழும்பு விஜேராம வீட்டை விட்டு விரட்டி தண்டனை வழங்கியுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தங்கல்லையில் கால்டன் இல்லத்தில் இன்று(13) மகிந்தவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதியின் விலேஹேன பிரதேசத்தில் சர்வஜன சபையை நிறுவும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பெசிய அவர்,
“முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாதொழிக்கும் போர்வையில் மகிந்த ராஷபக்சவை பழிவாங்கியுள்ளனர்.
மகிந்த சாதாரண மனிதர்
இந்த நாட்டின் 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை பழிவாங்கும் நோக்கம், இந்த அரசாங்கம் சார்ந்திருக்கும் மற்றும் ஆட்சியமைக்க உதவிய பிரிவினைவாத குழுக்களுக்கும் டயஸ்போராக்களுக்கு இருந்தது.
அதனை அவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தனர். அது நடந்துள்ளதாகவே எமக்கு தோன்றுகிறது. எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பல அரசியல் தலைவர்கள் அநாவசியமாக பொதுச் சொத்துக்களை பயன்படுத்தியுள்ளனர். அதில் மஹிந்த ராஜபக்சவும் அடங்குவார்.
இவை நாம் நன்கறிவோம். ஆனால் நாங்கள் நன்கறிந்த மகிந்த சாதாரண மனிதர். நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
அனாவசியமான செலவு
சொத்துக்களுக்காக ஓடியவர் அல்ல. நான் பல்கலைக்கழத்தில் இருந்த நாள் முதல், அவருடன் நெருங்கி பழகியவன்.
எங்கு போனாலும் கொடுப்பதை சாப்பிட்டு விட்டு கிடைக்கும் வாகனத்தில் சென்று எம்முடன் அரசியலில் ஈடுபட்டவர்.
அனாவசியமான செலவு செய்வதாக சொன்னவர்கள் யாரென்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதற்கு பின்னால் பல காரணங்கள் உண்டு” எனக் கூறியுள்ளார்.

செம்மணியும் மன்னாரில் தோண்டப்பட்ட ஒல்லாந்தர் கால எலும்பு கூடுகளா..! கேள்வி எழுப்பும் முன்னாள் கடற்படை அதிகாரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




