நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் சகோதரர் கைது
தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிஹால் வெதஆரச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 9ம் திகதி நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் நிஹால் வெதஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

திலிப் வெதஆரச்சி கைது
இன்று நண்பகல் அளவில் தங்காலை பொலிஸார் நிஹால் வெதஆரச்சியைக் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தற்போதைக்கு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
மேலும், இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam