எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல் (Live)
உலக சந்தையில் கடந்த வாரம் எரிபொருளுக்கான விலை குறையவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை மாற்றம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கூறுகையில், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர முன்னதாக அறிவித்திருந்தார்.
எனினும் விலைசூத்தரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவரப்படாமை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
உலக சந்தையில் எரிபொருள் விலையானது அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் விலைசூத்திரத்திரத்தை பயன்படுத்தி விலை அதிகரிக்கப்படுகின்றது.
குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில் ஏன் மக்களுக்கு எரிபொருளை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க முடியாது என கேள்வி எழுப்பியிருந்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை
இதற்கு டி.வீ.சானக பதிலளிக்கையில், இலங்கையில் டீசல் ஒரு லீற்றர் 12 ரூபாய் நட்டத்திலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 22 ரூபாய் நட்டத்திலும் விநியோகிக்கப்படுகின்றது.
உலக சந்தையில் கடந்த வாரம் எரிபொருளுக்கான விலை குறையவில்லை, மாறாக அதிகரித்துள்ளது என்பதனை ஹேஷா வித்தானகே புரிந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.