திருகோணமலையில் தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழப்பு
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து பயணித்த தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த தபால் தொடருந்து இன்று காலை திருகோணமலை நோக்கி பயணித்துள்ளது.
இதன்போது சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீவரகம பகுதியில் குறித்த நபர் தொடருந்தில் மோதியதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை

சம்பவத்தில் திருகோணமலை - தீவரகம ரொட்டரி நிவாஸ பகுதியைச் சேர்ந்த பந்துல பீரிஸ் (49 வயது) என, கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கணவன் தொடருந்தின் முன் பாய்ந்ததாக உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam