டொலருக்காக சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியதாக இலங்கை?
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை என்று சுற்றுலாப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அந்த பகுதிகளை சோதனையினையிட்ட போது சுற்றுலா பயணிகள் முகக் கவசமின்றி நடமாடுவதனை அவதானிக்க முடிந்துள்ளது.
அதற்கமைய, சுற்றுலாத் தலங்களாகக் கருதப்படும் காலி, மாத்தறை, ஹிக்கடுவ, மிரிஸ்ஸ உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் பொது இடங்களுக்குச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சியிடம் வினவிய போது, சுற்றுலா பயணிகளை முகக் கவசம் அணியுமாறு கட்டாயப்படுத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் அதற்கு தற்போது உரிய காலம் அல்ல என அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டவர் ஒருவரிடம் சென்று முகக் கவசம் அணியுமாறு கூறும் போது, “உங்கள் நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும் 90% தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறீர்கள். பிறகு நாம் ஏன் முகக் கவசம் அணிய வேண்டும்?” என சுற்றுலா பயணிகள் வினவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam