இன அழிப்பிற்கு துணைப் போனதா காங்கிரஸ்..! இயக்குநரின் குமுறலில் வெளிவந்த உண்மை
முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் தினம் ஒரு துக்க தினம், எமது இதயத்தை ரணமாக்கிய அந்த நாள், எது இனத்தையே துடிதுடிக்க இழந்தோம். அதனை நினைத்து பார்க்கையில் வேதனையளிக்கிறது.
அதிமுக - திமுக கூட்டணிக்கு வலியுறுத்தலா..! தவெக ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல் - போட்டுடைத்த ரஜினி
இன அழிப்பிற்கு துணைப் போன காங்கிரஸ்
அந்த உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். ஈழம் எப்போதும் மலரும் என்று தினம் தினம் ஏங்குகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நண்பர் விஜய் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கிறார் என்றவுடன், காங்கிரஸ் கரம் நீட்டியது.

இதனை பார்க்கும் பொழுது இன்று திமுக கவலைப்படுகிறதே, இதே காங்கிரஸ் தானே அன்று எமது ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தார்கள்.
அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து சிங்கள இராணுவத்துக்கு துணை போனார்களே எப்படி? என்னுடைய தொப்புள்கொடி பந்தங்களுக்கு அந்த துன்பத்தை அள்ளிக் கொடுத்தார்களே எப்படி? முள்ளிவாய்க்காலில் அன்று இரத்த ஆறினை ஓடவிட்டார்களே எப்படி?
அப்பாவி தமிழர்கள் அன்று தங்களை இழந்த போது எனக்கு எப்படி வலித்திருக்கும்? அன்று எனக்கு எப்படி துடித்திருக்கும்? என் ஈழத் தமிழ் இனத்தின் மீது அன்றைக்கு அவன் போட்டான் வேட்டு, சிங்களவர்களோடு இந்த காங்கிரஸ் வைத்தது கூட்டு, இன்றைக்கு திமுகவோடு வைத்தது கூட்டு, நேரம் பார்த்து வைத்தது வேட்டு. இப்போது உங்களுக்கு வலிக்குதே. ஈழத் தமிழர்கள் காங்கிரஸால் படாத பாடுபட்ட போது எனக்கு எப்படி வலித்திருக்கும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam