வாகனங்களை ஒப்படைக்க காலம் தாழ்த்தும் டயனா கமகே
முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்னமும் நான்கு வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய பிரஜை என்ற காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதன்படி, டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டது.
ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்ட வாகனங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு டயனாவிற்கு, சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனம்
எனினும் நேற்றைய தினம் வரையில் இந்த வாகனங்கள் சுற்றுலாத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
டிஸ்கவரி (Discovery) ரக ஜீப், டபள் கெப் வாகனம், ப்ராடோ (Prado) ஜீப் மற்றம் நிசான் (Nissan) ரக கார் என்பனவே இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் டபள் கெப் ரக வாகனம் விபத்து ஒன்று காரணமாக குருணாகல் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
