சுற்றுலாப்பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு டயானா கமகே விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே எச்சரித்துள்ளார்.
அண்மையில் விற்பனையாளர் ஒருவர் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு அதிக விலைக்குக் கொத்து ரொட்டியை விற்பனை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வர்த்தகர்களுக்கு வலியுறுத்தல்
தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் முட்டாள்கள் அல்ல, அவர்களை ஏமாற்ற முடியாது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், விருந்தோம்பல், நட்புறவு மிக்க சுற்றுலாத் தலமாக உள்ள இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தவேண்டாம் என்று கோரியுள்ளார்.
அத்துடன் ஏனைய சக வர்த்தகர்களின் வாழ்வாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்காமல் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் அவர் வர்த்தகர்களை வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam