மகிந்தவின் அறிவுரைகளை புறக்கணித்ததால் கவிழ்க்கப்பட்ட கோட்டாபயவின் ஆட்சி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச, அவரின் ஆட்சிக்காலத்தில் அவரின் சகோதரர் மகிந்த ராஜபகசவின் அறிவுரைகளை கூட கேட்காததாலேயே ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “கோட்டாபய ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் தனக்கு ஒன்றும் செய்யமுடியாது, தனது கைகள் கட்டுப்பட்டுள்ளது என்றார்.
அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம்
அதன் பின்னர் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றதிகாரம் மீள வழங்கப்பட்டது.
அதை நிறைவேற்றவும் ஒரு வருடம் கடந்தது. குறிப்பாக மகிந்த ராஜபக்ச அன்று பிரதமர் பதவி வகித்தார். அரசியலில் ஞானத்தில் கைதேர்ந்தவராக இருந்தார்.
ஆனால் அவரின் சில நிலைப்பாடுகள் கூட நிறைவேறவில்லை. அன்றைய நிலையில் கோட்டாபயவுக்கு நிறைய பேர் உபதேசம் வழங்க இருந்தனர். ஆனால் சரியான அறிவுறைகளை அவர் கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில் கோட்டாபய வேலைகளை செய்ய ஆரம்பித்த போது ,அதற்கு எதிராக போராட்டங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. அவர் அரசை மேலாண்மை செய்ய தவறிவிட்டார். மேலாண்மை செய்வதற்கான தளத்தை யாரும் அமைத்துக் கொடுக்கவில்லை” என்றார்.




