சீரான வடிகாலின்மையால் வெள்ளத்திற்குள் சூழ்ந்துள்ள தர்மபுரம் சந்தை (Photos)
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தர்மபுரம் பொதுச்சந்தை சீரான வடிகாலின்மையால் வெள்ளத்திற்குள் சூழ்ந்துள்ளதாக வியாபாரிகளும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தடவையும் மழை பெய்யும் போது சந்தை வெள்ளத்தினால் சூழப்பட்டிருப்பதனால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.
பல தடவைகள் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்கள் இதுவரை வெள்ளம் வடிந்தோடும் வகையில் சீரான வடிகாலமைப்பினை ஏற்படுத்தி தரவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |