இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட நான்கு பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிட்னி நகரிலுள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
இலங்கை அணியின் கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் 31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சிட்னி நகரில் பெரமாடா நீதிமன்றம் குணதிலக்கவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் நாளை தினம் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
