கிளிநொச்சியில் கடந்த ஆண்டில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கமநலஅபிவிருத்தி திணைக்களத்தினூடாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டஙக்ள் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்கள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கமநல அபிவருத்தி திணைக்களத்தின் கீழான அபிவிருத்தி வேலைகளுக்கு 10 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்று அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, உமையாள்புரம் கழிவு வாய்க்கால் புனரமைப்பு, உருத்திரபுரம் குளத்தின் கழிவு வாய்க்கால் புனரமைத்தல், கிளிநொச்சி - இராமநாதபுரம், பளை, பூநகரி, உருத்திரபுரம், அக்கராயன் குளம் ஆகிய கமநலசேவை நிலையங்களின் அபிவிருத்தி வேலைகளுக;குமாக மேற்படி நிதி கிடைக்கப்பெற்று அவ்வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri