போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

Batticaloa Sri Lankan Schools Education Teachers
By Kumar Oct 29, 2025 08:52 AM GMT
Report

ஆசிரியர்களாக பாடசாலைகளுக்கு இணைப்புச்செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேற்று முதல் பாடசாலையில் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் த.அனிரன் தெரிவித்துள்ளார்.

தமது நியாயமான கோரிக்கையினை அரசாங்கம் ஏற்று தமக்கான தீர்வினை வழங்க முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று(28.10.2025 பிற்பகல் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரணில்..

நீதிமன்றில் இருந்து வெளியேறினார் ரணில்..

நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள்

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியாற்றிக் கொண்டு வருபவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதி தொடர்பில் கடந்த ஐந்து வருடங்களாக பட்டதாரிகள் ஒன்றியம் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்களும், ஊடக சந்திப்புகளும் நடாத்தி வருகின்றோம்.

போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் | Development Officials Who Joined The Protest

வுழங்கப்பட்டுள்ள நியமனம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். ஆனால் செயற்பாடுகள் ஆசிரியர்கள்,

இவர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குரிய சலுகைகளும் கிடைப்பதில்லை, ஆசிரியர் பணியினை ஆற்றுகின்ற போதும் ஆசிரியர்களுக்கான சலுகைகளும் இவர்களுக்கு இல்லை.

எனவே இரண்டுமே இல்லாத நிலையில் இவர்களது நியமனம் இருக்கின்றன. தற்போது கடந்த வாரம் எமது நாட்டின் பிரதமர் நாட்டிலே முப்பத்தாயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் இந்த வெற்றிடங்கள் இருப்பதற்கான வெளிப்படுத்துகைகள் பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்படவில்லை.

ஏனெனில் ஆசிரியர்களாகச் சேவை புரிகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான கணக்கெடுப்புகளை இவர்கள் பார்ப்பதில்லை.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் கூட நாடாளுமன்றத்தில் தெரிவிப்பதில்லை. காரணம் நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை ஆசிரியர்களாக இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மறைமுகமாக நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

கற்றல் கற்பித்தலில் இருந்து விலகி... 

இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இருப்பு என்ன? இவர்கள் பாடசாலைகளில் இருந்து விடுபடுவார்களாக இருந்தார்

போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் | Development Officials Who Joined The Protest

வலயங்களில் மாத்திரமல்லாமல் பாடசாலைகளிலும் எவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் என்பதை இனங்காட்டும் முகமாக நாங்கள் நேற்றைய தினத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் கல்குடா, மண்முனை மேற்கு, பட்டிருப்பு போன்ற கல்வி வலயங்களில் பல காலமாக ஆசிரியர்கள் இல்லாமல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களே அந்தப் பணிகளை முன்னெடுத்திருந்தார்கள்.

நேற்றும் இன்றும் எங்களுடைய பணி பகிஸ்கரிப்பு இடம்பெற்று வருவதால் பல பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

இதனை எமது பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் பாடசாலைகள், வலயங்கள், ஆசிரியர் அதிபர்ளுடனான பிரச்சனைகள் காரணமாக இதனை மேற்கொள்ளவில்லை. நாங்கள் எமது தொழிலுரிமையை நிலைநாட்டுவதற்கான ஒரு வழிமுறையாகவே இதனைக் கையாளுகின்றோம்.

ஒரு நிரந்தர ஆசிரியர்களுக்கு ஒரு பாடசாலையில் எவ்வாறான பணிகள், நேரசூசிகள் வழங்கப்படுகின்றதோ அதே விதமான விடயங்களே ஆசிரியர்களாக இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்களை விடுத்து அவர்கள் கற்றல் கற்பித்தலில் இருந்து விலகி அலுவலகத்தில் ஆவணக் கோவைகளைச் செய்யும் அலுவலர்களாகவே நேற்றும் இன்றும் தங்கள் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பதற்றம்.. வெளியான பரபரப்பு காணொளி!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பதற்றம்.. வெளியான பரபரப்பு காணொளி!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US