தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காரணமாகவே நாடு பொருளாதார அபிவிருத்தியடைந்துள்ளது! அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
தற்போதைய அரசாங்கத்தின் சரியான ஆட்சிமுறை காரணமாகவே நாடு தனது தற்போது பொருளாதார வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற கமத்தொழில் சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றின் போது அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
முந்தைய அரசாங்கங்களால் தீர்க்கப்படாத மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பல பிரச்சினைகளுடன் தான் நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றோம். தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒன்றரை ஆண்டு கால குறுகிய காலத்தில் நாட்டைக் கட்டமைப்பதில் பல பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

குறிப்பாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
'இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும், இந்த அரசாங்கத்தின் சரியான ஆட்சிமுறை காரணமாகவே நாடு இந்த நிலையில் உள்ளது.
பொருளாதார வளர்ச்சிப்பாதை
பொருளாதார வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. இல்லையெனில், என்ன மாதிரியான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் பார்த்திருப்போம்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் வித்தியாரத்ன, பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகத்தினர் மீதான சட்ட நடவடிக்கைகளினால், அவர்களுடன் தொடர்புடைய அரசியல் குழுக்கள் பீதி நிலையில் இருக்கின்றனர்.
சட்டம் பாகுபாடு காட்டாது, முன்னாள் ஜனாதிபதிகளோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ குற்றம் புரிந்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த அரசாங்கம் தயங்காது நாடு தூய்மைப்படுத்தப்படும் என்றும், இனி யாரும் திருடவோ அல்லது மோசடி செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறிய அமைச்சர் வித்யாரத்ன, பொதுப் பணம் அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவிடப்படுவதால், அது முறையாகவும் தரமாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கமும் விவசாய அமைப்புகளும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.