இளைஞனுடன் தகாத செயலில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
மட்டக்களப்பில் இளைஞன் ஒருவருடன் ஒரினச் செயற்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்றைய தினம் (15.04.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பேக்கரி உரிமையாளரான நபர், பேக்கரி பணிக்கா திருகோணமலை பிரதேசத்தில் இருந்து 20 இளைஞன் ஒருவரை அழைத்துவரப்பட்டு தனது விடுதியில் தங்கவைத்துள்ளார்.
விளக்கமறியல்
இந்நிலையில், சம்பவ தினமான 14.04.2023 அன்று இரவு அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரின் நடத்தையை அவதானித்த நிலையில், 119 பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதன்பேரில் குறித்த விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் பேக்கரி உரிமையாளரை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்துள்ளதுடன், இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நேற்றைய தினம் (15.04.2023 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
