யாழ்.பல்கலைக்கழகத்தில் இனவெறியினரின் இழிசெயல்! தமிழக துணை முதல்வர் வேதனை
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அகற்றப்பட்டமைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவு தூண் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடித்து தகர்த்தப்பட்டுள்ளது.
ஈழப்போரில் ஈவு இரக்கமின்றி கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில், தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்துவம் இனவெறியினரின் இந்த இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது, என்பதுடன் இக்கொடுஞ்செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. pic.twitter.com/Mq6TI8XSA6
— O Panneerselvam (@OfficeOfOPS) January 9, 2021

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
