சொந்த வீடு திரும்பிய தேசபந்துவின் குடும்பத்தார்! அவர் இருக்கும் இடம் மட்டும் இரகசியம்
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பிவிட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தேசபந்து தென்னகோன் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்திய கருத்துக்களை அடுத்து அவர்கள் தங்களது சொந்த வீட்டுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றால், இந்த வாரம் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் எச்சரித்திருந்தன.
தேசபந்து தென்னகோனின் மனைவி
இந்த முடிவின் காரணமாக தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் திரும்பி வந்ததை அறிந்ததும், வீட்டிற்குச் சென்று மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
எனினும், தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும், தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்டன.
அத்துடன், தேசபந்து தென்னக்கோனை கண்டவுடன் கைது செய்யுமாறு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாத்தறை நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்தது.
எனினும், இன்றுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் தரப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri