இது நகைச்சுவையா?:பிரதி சபாநாயகர் நாடகத்தை கடுமையாக சாடியுள்ள மஹேல ஜயவர்தன
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் நாடகம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மறுபடியும் ராஜினாமா செய்தார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள மஹேல ஜயவர்தன,
“இது நகைச்சுவையா?. இந்த நியமனம் தற்போதைய நெருக்கடிக்குள் அவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விடயம் போல், காலமும் பணமும் வீணானது. அவர் மீண்டும் ராஜினாமா செய்துள்ளார்.”
“ இலங்கை நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் விலகி தயவு செய்து வீட்டில் இருக்க முடியுமா? என மேலும் தெரிவித்துள்ளார்.
Is this a joke? time and money wasted as if this appointment was the most pressing matter they had to do in this current crisis and he resigns again ?♂️ can everyone @SLparliment resign and stay home please ?? #GoHomeGota https://t.co/d8rylAg5e7
— Mahela Jayawardena (@MahelaJay) May 6, 2022

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
