பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் இன்று(17) உத்தரவிட்டார்.
நாவற்சோலை- கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த தனிமையிலிருந்த இளம் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குப்படுத்தியதாகத் தெரிவித்து குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டார்.
பின்பு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிறுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 10 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam