பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் இன்று(17) உத்தரவிட்டார்.
நாவற்சோலை- கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த தனிமையிலிருந்த இளம் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குப்படுத்தியதாகத் தெரிவித்து குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டார்.
பின்பு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிறுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri