பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் இன்று(17) உத்தரவிட்டார்.
நாவற்சோலை- கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த தனிமையிலிருந்த இளம் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குப்படுத்தியதாகத் தெரிவித்து குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டார்.
பின்பு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிறுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam