கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஜிமி சாந்து மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

Canada India Death Police
By Dhayani Feb 08, 2022 11:00 PM GMT
Dhayani

Dhayani

in கனடா
Report

கனடாவிலிருந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நாடு கடத்தப்பட்ட  இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் தாய்லாந்தின் ஃபூகெட்டின் ராவாய் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ,32 வயதான ஜிமி “ஸ்லைஸ்” சந்து, வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் காரில் இருந்து இறங்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சந்து, தாய்லாந்தின் சமீபத்திய தீவின் தெற்கு முனையில் உள்ள கடற்கரை ரிசார்ட் வளாகத்தில் உள்ள வில்லாவின் உரிமையாளரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து சாலோங் பொலிஸார் ஊடகங்களுக்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளனர்.

இறந்த கனேடியரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்தன. அவர் ‘மன்தீப் சிங்’ மற்றும் ‘அமர்ஜித் சிங் சிந்து’ ஆகியோருக்கான அடையாளத்தை வைத்திருந்தார். ஆனால், தாக்குதலில் பலியானது ஜிமி சாந்துதான் என்பதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் சென்னையில் பிறந்த சந்து, 7 வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உறவினர்களுடன் வளர்ந்தார். அங்கு பல்வேறு குற்றக்கும்பல்களுடன் இணைந்து செயற்பட்ட அவருக்கு பல கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

அதன்பின்னர் ஜனவரி 2014 இல் அபோட்ஸ்போர்டில் தமது போட்டிக்கும்பலான ரெட் ஸ்கார்பியன் குழுவின் தலைவரான மாட் கேம்ப்பெல்லைக் கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஒரு வருடம் கழித்து தண்டனை நீக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு குடியேற்ற விசாரணையைத் தொடர்ந்து, 2016 இல் சந்து கனடாவில் இருந்து அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டில், கெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கும் சட்டவிரோத தொழிற்சாலையை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலையானார்.

தொடர்ந்து ,தலைமறைவாகி மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அவர் இரகசியமாக வாழ்ந்து வருகிறார். அதேவேளை அவரது வலது கன்னத்தில் பெரிய தழும்பு இருந்ததால் அவரை செல்லமாக ‘ஸ்லைஸ்’ எ அழைக்கின்றனர்.

கடந்த ஆண்டு வான்கூவர் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு குற்றக் கும்பல் உறுப்பினரான கர்மன் கிரேவாலுடன் அவர் “நெருக்கமானவர்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஃபூகெட்டின் தெற்கே உள்ள கடலோர ரிசார்ட் நகரமான ரவாய்யில் உள்ள தி பீச் ஃபிரண்ட் ஹோட்டல் ஃபூகெட்டில் இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள் புதர்களில் இருந்து வெளியேறி, அவரை சுட்டுக் கொன்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 இந்த சம்பவம், கனடாவில் அந்த நபரின் கடந்தகால நடவடிக்கைகளின் அடிப்படையில் இது ஒரு தொழில்முறை ‘கொலை’ எனத் தோன்றினாலும், இந்தத் தாக்குதல் குறித்து பொலிஸார் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குற்றத்தில் தொடர்புடைய 2 பேரை பொலிஸார் தற்போது தேடி வருகின்றதாகவும், சம்பவத்தில் பலியானவர் 32 வயதான மன்தீப் சிங் (ஜிமி சந்து மற்றும் அமர்ஜித் சிங் சிந்து) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் இந்தியாவில் பிறந்திருந்தபோதும் , அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.


மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US