யாழில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 பலசரக்கு கடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை(Photos)
யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பனவற்றை பரிசோதித்து வருகின்றனர்.
காலாவதியான பொருட்கள் விற்பனை
இதன் ஒரு பகுதியாக கடந்தமாதம் யாழ்.நகர், குருநகர், வண்ணார்பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு, பலசரக்கு கடைகளில் தீடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளது.
இதன்போது யாழ்.நகர் பகுதியில் 06 பலசரக்கு கடைகளிலும் குருநகர் பகுதியில் 05 பலசரக்கு கடைகளும் வண்ணார்பண்ணை பகுதியில் ஓர் கடையும், திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அதன் உரிமையாளர்கள் பொது சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
திகதி காலாவதியான பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள், கடை உரிமையாளர்களுக்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் கடந்த 14.11.2022ம் திகதி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இன்றையதினம் 30.11.2022 ம் திகதி அவ்வழக்குகள் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கடை உரிமையாளர்கள் 12 பேரும் குற்றங்களை ஏற்று கொண்டதையடுத்து கடை
மொத்தமாக 305,000 ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறும், திகதி காலாவதியான பொருட்களை
அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.