கூட்டுறவு திணைக்களம் ஜனநாயகம் இன்றி செயற்படுகிறது!
கூட்டுறவு திணைக்களம் ஜனநாயகம் இன்றி செயற்படுவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15.03.2023) வடமராட்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் இடம் பெற்ற இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஒரு கட்சி சார்ந்தவர்களே கலந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் தெரிந்து கொள்ளாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.