அடையாள வேலை நிறுத்தம்: கடமைகளில் இருந்து விலக சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலக பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், இன்று (08.11.2023) முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய அனைத்து அறிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், முன்னேற்ற மீளாய்வு உட்பட அனைத்து கூட்டங்களிலும் பங்குபற்றுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள் அடையாள வேலை நிறுத்தம்
முன்னதாக, அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு செலவுகளுக்கு எதிராக உதவித்தொகையை உயர்த்தாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் 2 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அந்த தொழில் நடவடிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காமையால் மேலும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்ததாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam