இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,000 ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 என அப்பிரிவு கூறியுள்ளது.
மேலும், 47 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக பதிவான நோயாளிகள்
ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 21,538 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த 11 நாட்களில் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கடந்த 12 நாட்களில் 12,692 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை பதிவான நோயாளிகளில் அதிகபட்சமாக மேற்கு மாகாணத்தில் 35,823 பேர் பதிவாகியுள்ளனர்.
மேலும், தெற்கு மாகாணத்தில் 10,657 நோயாளிகளும், சபரகமுவ மாகாணத்தில் 5,756 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 5,560 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் - நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்