டெங்கு உயிரிழப்பு 53 ஆக அதிகரிப்பு! 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு நோயின் பரவல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
முறையான மருத்துவப் பரிசோதனை
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, காய்ச்சல் அல்லது டெங்கு நோய்க்கான ஏனைய அறிகுறிகள் தென்படுமாயின், காலதாமதம் செய்யாது உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் இதர அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், தகுதியான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நோயின் தீவிரத்தைக் குறைக்கவும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் அவசியமாகும் என்று சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan