மக்களே அவதானம்! நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று சுகாதார வல்லுநர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
2021 ஜனவரி 1 முதல் டிசம்பர் வரை மொத்தம் 35,924 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இன்று வரை 72,321 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், பரவலைக் கட்டுப்படுத்த நுளம்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பது மிகவும் அவசியமானதாக இருந்தாலும் சுகாதார அமைச்சுக்கு மக்களிடமிருந்தும் கிடைத்த பங்களிப்பு மிகக் குறைவு என்று இதன்போது ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக எண்ணிக்கையாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
