கொழும்பிலிருந்து குப்பைகளை தொடருந்து மூலம் கொண்டு சென்று கொட்டுவதை எதிர்த்து புத்தளத்தில்ஆர்பாட்டம்
கொழும்பிலுள்ள குப்பைக் கூழங்கள் தொடருந்து மூலம் கொண்டுவரப்பட்டு புத்தளம் அருவைக்காட்டில் கொட்டுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் புத்தளம் மணல்குன்று தொடருந்து பாதைக்கு அறுகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதேவேளை கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டு வந்து அருவைக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018ம் ஆண்டு 9ம் மாதம் 28ம் திகதி புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக புத்தளம் மக்கள் 100 சத்தியாக்கிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்பு
இதேவேளை இரவு வேளைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் டிப்பர் வாகனம் மூலம் குப்பைகள் அருவக்காட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு தேர்தலின் பிற்பாடு குறித்த குப்பை கொண்டு செல்லும் செயற்பாடு நிறுத்தப்பட்டு மீண்டும் இன்றிலிருந்து கொழும்பிலிருந்து குப்பைகளை தொடருந்து மூலம் ஏற்றி அருவக்காடு அகுதியில் கொட்டுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |