கட்டுமுறிவு பிரதான வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தின் கட்டுமுறிவு கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் மக்கள் இன்று(09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கட்டுமுறிவு பிரதான வீதியில் வருடாந்தம் மாரி மழைக் காலத்தில் முற்றாக நீரினால் மூடப்படுவது வழக்கம். இந்நிலையில் கிராமிய பாலங்கள் அமைக்கும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் குறித்த வீதியிலும் பாலம் ஒன்று அமைக்கப்படுவதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் அது இற்றைவரை ஆரம்பிக்கப்படாததால் அவ்வீதியைப் பயன்படுத்தும் கட்டுமுறிவு, ஆண்டான்குளம், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள் மாணவர்கள், உள்ளிட்ட பலரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆகையால் உடன் உரிய பாலத்தை அமைத்துத் தரும்படி தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தினால் கிராமிய பாலங்கள் அமைக்கும் செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிய பாலத்தை அமைப்பதற்குரிய பொருட்கள் அவ்விடத்திலே சேமிக்கப்பட்டுள்ள போதிலும் ஏன் இற்றைவரையில் உரிய பாலத்தில் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த பாலத்தினை நிவர்த்தி செய்து தராதா பட்சத்தில் வியாழேந்திரனுக்கு மக்கள்
துரத்தி அடிக்கவும் தயாரா உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.







பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
