ஹட்டனில் ஹிஷாலினிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
ஹட்டனில் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஈரோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (24.07.2021) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் புட்சிட்டிக்கு முன்பாக காலை 11 மணியளவில் ஆரம்பித்து நடைபாதையாக ஹட்டன் நகரத்துக்கு வந்தடைந்து ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக ஒன்றுகூடி நிறைவு செய்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் யுவதிகள் மத பேதமின்றி கட்சி பேதமின்றி சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.