அம்பாறையில் ஆசிரியரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்(Photos)
அம்பாறை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் மற்றும் மாணவிகள் மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியரை இடமாற்றக்கோரி பாடசாலைக்கு முன்னால் இன்று(09.11.2022) காலை பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பாடசாலையில் இடம்பெற்று வரும் நிர்வாக சீர்கேட்டினால் நேற்று இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து மாணவர்கள் பாதிக்கப்படுவதையிட்டு பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்னால் இன்று காலை 8 மணிக்கு ஒன்றினைந்துள்ளனர்.
மதுபானம் விற்பவர் பாடசாலையில் சிற்றுண்டி விற்பதா...!
இதன்போது பாடசாலையின் நிர்வாக சீர்கேடே மாணவனின் உயிரை பறிக்க காரணம், கல்வி
அமைச்சே பொருத்தமான அதிபரை நியமி, வெளியில் மதுபானம் விற்பவர் பாடசாலையில் சிற்றுண்டி விற்பதா?,பாலியல் சீண்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா? அண்ணன் தம்பி உறவு
சாகவாசம் அன்னை கல்வியை அழிப்பதா போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள்
எழுப்பியுள்ளனர்.
இதனைதொடர்ந்து சுமார் ஒருமணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.




