கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் ஆர்பாட்டம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்லவை உடனடியாக கைதுசெய்ய கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று(09.01.2023) இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சுகாதார ரீதியான பிரச்சினை
கடந்த காலங்களில் நாட்டில் சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு அமைச்சர் என்ற வகையில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க தவறியதாகவும், இதன் காரணமாக அவர் உடனடியாக கைதுசெய்ப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், நாட்டிற்கு கொண்டுவரபட்ட சட்டவிரோத மருந்து இறக்குமதியால் பல உயிர்கள் பலியானதாகவும், இதற்கு கெஹலிய ரம்புகவெல்லவே பொறுப்புக்கூறவேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டிருந்ததோடு நீர்த்தாரை பிரயோக வாகனமும் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்யூனோகுளோபுலின் ஊழலின் பிரதான சந்தேக நபர் ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam