பண்டாரவன்னியன் சிலை முன்பு சத்தியப் பிரமாணம் செய்த ஜனநாயக தேசிய கூட்டணி!
ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகம் அருகாமையில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுச் சிலைக்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சத்தியபிரமாண நிகழ்வு
ஜனநாயக தேசிய கூட்டணியானது கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியாவில் ஐந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது.
அந்தவகையில் வவுனியா மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பரமேஸ்வரன் கார்த்தீபன், செட்டிகுளம் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள சங்கரன் சசிக்குமார், இராசரத்தினம் லிங்கேஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீரசிங்கம் ஶ்ரீதரன் மற்றும் சதாநந்தம் சுகிர்தன் ஆகியோர் தமது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டனர்.
குறித்த சத்தியபிரமாண நிகழ்வு சிறி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (சிறிரெலாே) செயலாளர் ப.உதயராசாவின் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சத்தியபிரமாண நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், கலந்து கொண்டிருத்தனர்.




அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam
