தமிழின படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்தி பவனி இரண்டாம் நாள் (Photos)
தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்திப் பவனி அம்பாறை வீரமுனையிலுள்ள 175 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபியில் இருந்து ஆரம்பித்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்றைய தினம் (14.05.2023) அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை இந்த வாகன ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் 1990ஆம் ஆண்டு தமிழர்கள் 175 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தூபில் சுடர் ஏற்றி, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் இன்றைய தினம் ஊர்தி பவனியை ஆரம்பித்துள்ளனர்.
நினைவு தூபி
இந்த ஊர்தி பவனியானது அங்கிருந்து மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியை சென்றடையந்து அங்குச் சுடர் ஏற்றப்படவுள்ளது.
தமிழினப் படுகொலை
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு - சத்ருக்கொண்டான் பகுதியிலுள்ள நினைவு தூபிக்குச் சென்று, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் செங்லடி - வாழைச்சேனை ஊடாக வாகரையை சென்று அங்கிருந்து இன்றைய தினம் திருகோணமலையைச் சென்றடையவுள்ளது.
இந்த ஊர்தி பவனி நாளைய தினம் (15.05.2023) திருகோணமலையிலுள்ள நினைவு தூபிக்கு சென்றடைந்து அங்கு அஞ்சலி செலுத்தி பின்னர் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
