மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கை நிராகரிப்பு
இலங்கை மின்சார சபையின், கோரிக்கை முகாமைத்துவ அட்டவணைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.
இந்த தேவை மேலாண்மை அட்டவணை 2022ஆம் ஆண்டின் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள 331,000 மாணவர்களின் உரிமைகளை மீறுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை
முன்னதாக மனித உரிமைகள் ஆணைக்குழு, உயர்தரப் பரீட்சைகள் நிறைவுப்பெறும் வரை மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று மின்சாரசபை மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றிடம் கேட்டிருந்தது.
எனினும் இதனையும் மீறி மின்சாரசபை தொடர்ந்தும் மின்வெட்டை நடைமுறைப்படுத்தி
வருவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க குற்றம்
சுமத்தியுள்ளார்.