பாகிஸ்தானை இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இந்தியா, பாகிஸ்தானை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்று பாகிஸ்தானிய அரசியல் விமர்சகர் சையத் ஜைத் ஜமான் ஹமீத் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையானது, பாகிஸ்தானிய அரசாங்கம் மற்றும் இராணவ படைக்கு விடுக்கப்பட்டுள்ளது.
ஜமான் ஹமீத் வெளியிட்டுள்ள காணொளியில், "இந்தியா இப்போது எந்த நேரத்திலும் பாகிஸ்தானைத் தாக்கலாம்.. இப்போது என்ன நடக்கப் போகிறது, பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும் என்பது எங்கள் மிக முக்கியமான பகுப்பாய்வு.
வெளியான காணொளி
பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு மதிப்புமிக்க ஆலோசனை, நீங்கள் எங்கள் வார்த்தைகளைக் கேட்டால், இந்தப் போரில் பாகிஸ்தானுக்கு குறைவான சேதம் ஏற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
بھارت اب کسی بھی وقت پاکستان پر حملہ کر سکتا ہے۔۔
— اللہ کے بندے۔۔۔ (@missiontakmeel) November 10, 2025
اب کیا ہونے والا ہے اور پاکستان کو کیا کرنا ہے ہمارا اہم ترین تجزیہ۔۔۔پاکستان ارمی اور حکومت کے لیے قیمتی نصیحتیں۔
اگر ہماری بات مان لیں گے تو اس جنگ میں پاکستان کو نقصان کم ہوگا۔
لبیک غزوہ ہند۔۔ pic.twitter.com/iCC98SZ4QI
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில், நேற்று நடந்த திடீர் குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, குறித்த சம்பவம் சிலின்டர் ஒன்று வெடிப்புக்குள்ளானதாலேயே ஏற்பட்டதாகவும் இதனை இந்திய அரசாங்கம் திசை திருப்புவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |