அத்தியாவசிய பொருட்களை எடுத்து வருவதில் தாமதம்: வர்த்தகர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
''தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக அத்தியாவசிய பொருட்களை எடுத்து வருவதில் தாமதங்கள் ஏற்படலாம் என்பதால் யாழ்.வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட்டு பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய நிலையில் பொருட்களைப் பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதனை வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளாார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சில இடங்களில் வர்த்தகர்கள் பொருட்களைப் பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை கண்காணிப்புகளை மேற்கொள்ளும். தென்னிலங்கையிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வருவது ஒரு வாரமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பகிர்ந்து விற்பனை செய்வது தொடர்பிலும்
தற்போதைய நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பன தொடர்பிலும் யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக
சங்கங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுடன் பேச்சு நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan