கத்தோலிக்கப் பேரவை அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் திருப்தி அளித்தாலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது காலம் தாழ்த்தப்படுவது குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கத்தோலிக்க தேவாலயப் பேரவையின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூன் கிரிசாந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது காலம் தாழ்த்தப்படுவது குறித்து அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சனம் செய்ய விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஏனையவர்களுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்றே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென அருட் தந்தை கிரிசாந்த கோரியுள்ளார்
