கோவிட் வைரஸிடம் இருந்து தற்காத்துக்கொள்ளுங்கள்! மக்களுக்கு இராஜாங்க அமைச்சர் அறிவுரை
கோவிட் வைரஸிடம் இருந்து தற்காகத்துகொள்ளுமாறு மீண்டும், மீண்டும் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நோய் பரவுவதை எந்தளவுக்கு முகாமைத்துவம் செய்ய முயற்சித்தாலும் நோய் பரவும் வாய்ப்புள்ளது.
எப்போதும் முகக்ககவசத்தை அணிந்திருக்க வேண்டும். அத்துடன் ஒரு மீற்றர் இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இதனை தவிர அத்தியவசிய தேவைகளை தவிர வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம். மக்கள் நடமாட்டம் கூடிய இடங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் எனவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.