தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அழைப்பு விடுத்த யாழ். மாநகர முதல்வர்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான ஒன்றுகூடல் இன்று (17.09.2022) மாலை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தலை ஒரு பொது கட்டமைப்பின் கீழ் உருவாக்கி சிறப்பாக நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல் நிகழ்வு
சமயத் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன்
ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri