தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அழைப்பு விடுத்த யாழ். மாநகர முதல்வர்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான ஒன்றுகூடல் இன்று (17.09.2022) மாலை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தலை ஒரு பொது கட்டமைப்பின் கீழ் உருவாக்கி சிறப்பாக நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல் நிகழ்வு
சமயத் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன்
ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam