தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அழைப்பு விடுத்த யாழ். மாநகர முதல்வர்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான ஒன்றுகூடல் இன்று (17.09.2022) மாலை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தலை ஒரு பொது கட்டமைப்பின் கீழ் உருவாக்கி சிறப்பாக நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல் நிகழ்வு
சமயத் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன்
ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 19 நிமிடங்கள் முன்
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri