பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள்!
பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு அரசாங்கம் பல தீர்மானங்களை நெருக்கடியான சூழ்நிலையில் முன்னெடுத்துள்ளது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கோவிட் வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ளும். எக்காரணிகளுக்காகவும் அபிவிருத்தி பணிகள் இடை நிறுத்தப்படமாட்டாது.
பூகோள மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட் வைரஸ் தாக்கத்தினால் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு அரசாங்கம் பல தீர்மானங்களை நெருக்கடியான சூழ்நிலையில் முன்னெடுத்துள்ளது.
நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுக் கொள்கிளார்கள். நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் எதிர்தரப்பினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். நாட்டை முழுமையாக முடக்கினால் மக்கள் பொருளாதார மட்டத்தில் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
நாட்டை முழுமையாக முடக்கும் நோக்கம் கிடையாது என அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது. மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி நிர்மாண பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல சவால்களுக்கு மத்தியில் அபிவிருத்தி நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எக்காரணிகளுக்காகவும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் இடை நிறுத்தப்படாது என குறிப்பிட்டுள்ளார்.