கட்டுப்பணத்தை மீள செலுத்த தீர்மானம்! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
2023 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்காக வைப்புத்தொகையை செலுத்தியவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி இதற்கு தேவையான ஆவணங்களை இந்த மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையர் கூறியுள்ளார்.
பற்றுச்சீட்டின் பிரதி
பிணைத்தொகையை செலுத்திய நபருக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் பிரதி மற்றும் வைப்புத்தொகையை வைப்புத்தொகையாக செலுத்துவதற்கான கோரிக்கை கடிதத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய மாவட்ட தேர்தல் அலுவலகம் தாமதமின்றி பிணைத்தொகையை செலுத்தும் என்றும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri