இலங்கையில் தேங்காய் எண்ணெய் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
தரமற்ற தேங்காய் எண்ணெயை நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது, அவ்வாறான தேங்காய் எண்ணெய் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக நேற்று (30.11.2023) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தரப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உரிய ஆய்வுகளின் பின்னரே மீள் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் சில தேங்காய் எண்ணெய் உயர் தரமானவையா என கூற முடியாததால், அவற்றை தரப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |