மத்திய மாகாண பாடசாலைகள் குறித்து நாளை தீர்மானிக்கப்படும்! - காமினி ராஜரத்ன
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்திய மாகாணத்தில் பாடசாலைகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மாகாண சபையின் பொதுச் செயலாளர் காமினி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களிடம் பேசிய அவர், “மத்திய மாகாணத்தில் பல பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மத்திய மாகாண கோவிட் கட்டுப்பாட்டு குழு மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் நாளை மாலை கூடி, பிரச்சினைகள் குறித்து விவாதித்து பின்னர் பாடசாலைகளை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என காமினி ராஜரத்ன தெரிவித்தார்.
இருப்பினும், மத்திய மாகாணத்தில் பாடசாலைகளின் நடவடிக்கைகள் நாளை வழக்கம் போல் மீண்டும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
