தலைவர் வந்தால் கொடுப்போம்! விடுதலைப்புலிகளின் சொத்துக்களை வைத்திருப்பவர்களின் முடிவு (VIDEO)
தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை வைத்திருக்கும், தலைவர் வந்தால் சொத்துக்களை திரும்ப கொடுப்போம் என கூறுபவர்களின் சரித்திரத்தினை பார்த்தால் அவர்கள் யாரும் ஒற்றுமையினை விரும்பவில்லை என்பதே உண்மையென பிரான்ஸில் இருக்கும் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குநரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் வாழ் மக்கள் அனைவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. சிலர் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியுள்ளனர்.சிலரிடம் வேறு பணமும் உள்ளது.தங்களது இருப்பு, பிழைப்பு கெட்டுப்போய்விடும் என்பதற்காக ஆட்களை வைத்து வெளிநாட்டு வேலைத்திட்டங்களை குழப்பி திட்டமிட்டு புலம்பெயர் வாழ் மக்களின் ஒற்றுமையினை சிலர் குழப்பி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
தமிழீழ விடுதலைபுலிகளும் சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம்.சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதனையும் தரமாட்டார்கள் என்பதினை காட்டுவதற்கே சர்வதேச விசாரணைக்கு சென்றார்கள்.இருப்பினும் அவர்கள் சில்லறை தனமாக செல்லவில்லை.
ஆயுத பலத்தில் 3 இல் 2 பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகளையே சிங்கள பேரினவாத பௌத்த அரசு பேய் காட்டிவந்தது.
குறிப்பாக மகிந்தவின் அரச ஆட்சி காலத்தில் ஒன்றுமே நடக்காது, இன்றும் அதே ஆட்சிக்காரர்கள் ஆட்சிக்கு வந்து தமிழர்களை பகடைகாய்களாக பயன்படுத்துவதை தமிழ் தலைமைகள் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை என்றால் இவர்கள் ஏன் அரசாங்கத்தில் உள்ளனர் என்ற சந்தேகம் நிலவுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.