அரச ஊழியர்களை பணிக்கு அழைக்க முடிவு! வெளியாகியுள்ள விசேட தகவல்
எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறந்தவுடன் அரச மற்றும் தனியார் ஊழியர்களை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பணிக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாம் திகதி முதல் தனியார் துறை ஊழியர்களை வழக்கம் போல் அழைப்பதை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நிதி அமைச்சில் இன்று மதியம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சகங்களின் செயலாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பேருந்து சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்படி, முதலாம் திகதி முதல் காலை 9 மணிக்கு அரசு ஊழியர்களை அழைக்கவும், காலை 10 மணிக்கு தனியார் துறை ஊழியர்களை அழைக்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயணிக்ககூடிய வகையில், சுகாதார அமைப்புக்கு ஏற்ப ரயில் மற்றும் பேருந்து சேவைகளை சமமாக இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விரைவில் வெளியிடப்படும்.
இதனிடையே, நாட்டின் முழுமையாக திறப்பது குறித்து சுகாதார அமைச்சகம் விரைவில் ஒரு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவை தாக்கிய பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணை: பிரித்தானியா மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan